FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியா, சீனாவை நாங்கள் ஏமாற்றுவதில்லை

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் சுமூக உறவை பேணி காக்கவே நேபாளம் விரும்புகிறது. குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை

Updated On : 27 ஜூன் 2018, 1:24 am IST
பகிர்:

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் சுமூக உறவை பேணி காக்கவே நேபாளம் விரும்புகிறது. குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நேபாளப் பிரதமர் சர்மா ஓலி  தெரிவித்தார்.
ஆறு நாள் பயணமாக சீனா சென்றுவிட்டு நாடு திரும்பிய அவர், அந்தப் பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசியபோது இவ்வாறு கூறினார்.
மேலும், இந்தப் பயணத்தின்போது சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் சர்மா ஓலி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக, அவர் மேலும் பேசியதாவது: சீனாவுடன் நாம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் யாவும், வளர்ச்சி மற்றும் வளம் குறித்து நாம் கொண்டுள்ள பொது இலக்கை பிரதிபலிப்பவை. இந்த இலக்கை அடைவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக சீனாவும் உறுதி அளித்திருக்கிறது.
இந்தியா மற்றும் சீனாவுடன் சுமூக உறவை கடைப்பிடிப்பதன் மூலமாக மட்டுமே, நேபாளத்தின் வளர்ச்சியும், வளமும் உறுதி செய்யப்படும் என்பதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. குறுகியகால அரசியல் ஆதாயங்களுக்காக நாம் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில்லை. சுக, துக்க நேரங்களில் நாம் அண்டை நாடுகளுடன் துணை நின்று வருகிறோம்.
நமது வெளிநாட்டு மற்றும் சர்வதேச கொள்கைகள் அனைத்தும் நேர்மையான நோக்கங்களுடன் வகுக்கப்படுகிறது. இதனால், நமது நாட்டுப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments