FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லாவில் 3 சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பயங்கரவாதிகள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லாவில் 3 சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பயங்கரவாதிகள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் பிராந்திய காவல் துறை ஐஜி ஸ்வயம் பிரகாஷ் பானி, செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பாரமுல்லாவில் கடந்த மாதம் 30-ஆம் தேதி 3 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பயங்கரவாதிகளையும், அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்த 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 4 பயங்கரவாதிகளில் 2 பேருக்கு சிறார்கள் கொலை வழக்கில் தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
கொலையை நேரில் பார்த்தவர்கள் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் இருந்ததாகத் தெரிவித்தனர். துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று ஸ்வயம் பிரகாஷ் பானி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments