20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி: கேரள அரசு முடிவு
கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இலவச இணையதள சேவையை பெறுவர். எஞ்சியோருக்கு குறைந்த விலையில் இணையதள சேவை கிடைக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.