நொய்டாவில் தேர்தல் பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கிய 'நமோ உணவு': உண்டானது சர்ச்சை!
நொய்டாவில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் நமோ உணவு என்று பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
நொய்டாவில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் நமோ உணவு என்று பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஆனால் நமோ ஃபுட்ஸ் என்ற கடையில் இருந்தே இந்த உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டதாகவும், இது எந்த அரசியல் கட்சியினராலும் வழங்கப்பட்டது அல்ல என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் இருந்த காவலர்களுக்கு 9 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அந்த உணவுப் பொட்டலங்களின் மீது நமோ உணவு என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செய்தியாளர்களும், பொதுமக்களும் அதனை வலைத்தளத்தில் பகிர சர்ச்சை உருவானது.
Advertisement
Advertisement
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த உணவினை வழங்கியதாக தவறான தகவல்கள் பரபரப்பட்டு வருகிறது. இது மிகவும் தவறு. அருகில் இருக்கும் நமோ ஃபுட்ஸ் என்ற கடையில் இருந்துதான் உணவு வாங்கப்பட்டதேத் தவிர, எந்த அரசியல் கட்சியும் கொடுக்கவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.