FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறு, குறு நிறுவனங்களுக்கு உடனடி நிவாரணம்: பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கும் ராகுல்

கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) தொழில் நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) தொழில் நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளையும் வரவேற்றுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கான பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது. இந்த தொகுப்புத் திட்டத்தில் என்னென்ன நிவாரணங்கள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. காங்கிரஸின் சமூக ஊடகங்கள் மூலமாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனப் பதிவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கரோனா ஊரடங்கால் சிறு, குறு நிறுவனங்கள் அடைந்திருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமா்ப்பிப்பதற்காக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என காங்கிரஸ் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments