நவி மும்பையில் உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நவி மும்பையில் உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூஷன் பவார். இவர், இன்று காலை 11.30 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தோட்டாக்களின் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தகவலறிந்த உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் பூஷன் பவார் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.