FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜேபிசி விசாரணை தேவை: காங்கிரஸ் 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 4 ஜூலை 2021, 5:35 am IST
பகிர்:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் அணுகுமுறை சரியானது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்டது என்பதால் நேர்மையான, சுதந்திரமான ஜேபிசி விசாரணை மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். 

Advertisement

Advertisement

இந்த விவகாரம் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல; மாறாக இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது; மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்புடையது.

ஜேபிசி குழுவால் அனைத்து சாட்சிகளையும் அழைத்து விசாரிக்க முடியும் என்பதோடு, அனைத்து அரசு ஆவணங்களையும் கேட்டுப் பெற முடியும். ஆனால், உச்ச நீதிமன்றத்துக்கோ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கோ (சிவிசி) இது சாத்தியமில்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஜேபிசி குழு அமைத்து விசாரிப்பதே ஒரே வழி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments