மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் 
இந்தியா

லக்கிம்பூர் சம்பவம்: மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

லக்கிம்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிரத்தில் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றன.

DIN

லக்கிம்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிரத்தில் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜிநாமா செய்ய கோரியும் மகாராஷ்டிரம் முழுவதும் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆளும் கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து, இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

SCROLL FOR NEXT