ம.பி.யில் மர்மக் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் தரையில் கிடத்தி சிகிச்சை
மத்தியப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியதால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் நேரிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியதால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் நேரிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் மர்ம வைரஸ் காய்ச்சலால் ஏராளமான சிறுவர், சிறுமியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், எஞ்சிய சிறுவர், சிறுமிகளை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக பேசிய மாவட்ட தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி அனிதா கூறியதாவது, அதிகமாக உள்ள நோயாளிகளை மற்ற மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளேன். அவை அடுத்த ஓரிரு நாள்களில் நடைபெறும் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.