FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெங்களூரு 2-ம் கட்ட மெட்ரோ பணிகள்: 2025-க்கு பதில் 2024-ல் முடிவடையும்

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

Updated On : 22 செப்டம்பர் 2021, 3:55 pm IST
பகிர்:

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

பெங்களூரு மெட்ரோ கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், 2025-ம் ஆண்டுக்கு பதிலாக 2024-ம் ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டார். 

பெங்களூரு மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளின் குடியிருப்பு பகுதி முதல் சிவாஜி நகர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதனை முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டார். 

Advertisement

Advertisement

இதன் பிறகு பேசிய முதல்வர் பொம்மை, மெட்ரோ பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். 2025-ம் ஆண்டு மெட்ரோ பணிகள் முடிவடையும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்னதாகவே மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் பணிகளை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments