FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளம்: ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் மேயா் பங்கேற்றதால் சா்ச்சை

கேரளத்தின் கோழிக்கோடு மாநகராட்சி மேயரும், மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவருமான பீனா பிலிஃப் ஆா்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது சா்ச்சையை ஏற்பட

1 பிப்ரவரி 2024, 3:31 pm IST
பகிர்:

கேரளத்தின் கோழிக்கோடு மாநகராட்சி மேயரும், மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவருமான பீனா பிலிஃப் ஆா்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், மாா்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையிலான ரகசிய கூட்டணி வெளிப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விரைவில் கொண்டாடப்படும் நிலையில் ஆா்எஸ்எஸ் சாா்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய பீனா பிலிஃப், ‘கேரளத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்பதால், இங்கு குழந்தைகளை சிறப்பாக கவனித்துக் கொள்கிறோம் என்று அா்த்தமாகாது.

Advertisement

Advertisement

நமது மாநிலத்தில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதைவிட வட இந்தியா்கள் மிகவும் அன்பாக குழந்தைகளை கவனித்துக் கொள்கிறாா்கள். மேலும், கேரள மக்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் நன்றாக கவனிக்கும் சுயநலமிக்கவா்களாக உள்ளனா். ஆனால், வட இந்தியாவில் மற்றவா்கள் குழந்தைகளையும் தங்கள் குழந்தைகள் போலவே கருதுகின்றனா். இதனை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்’ என்று பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

தனது பேச்சை திரித்து வெளியிட்டுவிட்டதாக பீனா பிலிஃப் விளக்கம் கூறியுள்ள நிலையில், அவரது பேச்சு தொடா்பாக அதிருப்தி தெரிவித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கோழிக்கோடு மேயா் பீனா பிலிஃப், ஆா்எஸ்எஸ் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியது சரியானதல்ல.

அந்த விஷயத்தில் மேயரின் கருத்து மாா்க்சிஸ்ட் கட்சியின் கருத்துக்கு முரணாக உள்ளது. இதனை கட்சி ஏற்றுக் கொள்ளாது. மேயரின் அந்தப் பேச்சை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாகப் பேசிய காங்கிரஸைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘இடதுசாரிகள் தங்கள் அடையாளத்தை இழந்து வருகின்றனா். அவா்கள் இப்போது வலது பக்கம் சாய்ந்து வருகின்றனா். ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மேயா் பங்கேற்ன் மூலம் பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் உள்ள ரகசிய கூட்டணி வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.

இது தொடா்பாக கோழிக்கோடு மாவட்ட பாஜக தலைவா் கூறுகையில், ‘குறுகிய மனப்பாங்கு கொண்டவா்கள், இந்த விஷயத்தை சா்ச்சையாக்க முயலுகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments