இந்தியா

திப்பு சுல்தான் படம் கிழிப்பு: 'காங்கிரஸில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி'

DIN


கர்நாடக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக மாநிலத் தலைவர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

சுதந்திர நாளையொட்டி கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், பெங்களூருவிலுள்ள ஹுட்சன் சர்க்கிள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் படம் இருந்த காங்கிரஸ் கட்சி வைத்த பதாகையை மர்ம நபர்கள் கிழித்தெறிந்தனர். 

இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், நிகழ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,  காங்கிரஸ் கட்சியின் சுதந்திர நாள் பேரணியை சிலரால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. மாநிலத்தில் பிரச்னைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர் என பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT