முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: துப்பாக்கி முனையில் பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு மிரட்டல்

ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2022, 1:06 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், முன்னாள் பாஜக எம்எல்ஏ அம்ரிதா மேக்வால். இவர் ஞாயிறு இரவு அஜ்மீரிலிருந்து ஜலோருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நரேலி புழியா அருகே கார் வந்துகொண்டிருந்தபோது அதனை நிறுத்திய மர்ம நபர்கள் அம்ரிதாவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 

அத்துடன் காரின் கண்ணாடியையும் அவர்கள் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ஆழ்வார் கேட் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தப்பியோடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் மிரட்டிய சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.