வெளிநாடு செல்வோரின் வசதிக்காக சிறப்பு வடிவிலான இ - பாஸ்போர்ட் வசதி இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்..
நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஒரு நாடு, ஒரு பதிவு முறை அறிமுகம் செய்யப்படும்.
அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வங்கி சேவைகளுடன் தபால் சேவைகளும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.