இந்தியா

உக்ரைனிலிருந்து வெளியேற அதிபர் மறுப்பு

DIN


உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க உதவியை அதிபர் வொலோதிமீர் ஸலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.

உக்ரைன் மீது பலமுனைத் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அந்த நாட்டு தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற மூன்றாவது நாளில் தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டு மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என அதிபர் ஸலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, தங்களது அரசு உதவியுடன் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஸ்லென்ஸ்கி அமெரிக்காவால் அறிவுறுத்தப்பட்டார்.

போர் இங்குதான் நடக்கிறது என்றும் தற்போதைய தேவை பயணம் அல்ல, ஆயுதங்கள்தான் என்றும் ஸலென்ஸ்கி கூறியதாக அமெரிக்க உளவுப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி ரஷியப் படைகள் முன்னேறத் தொடங்கியதையடுத்து, அங்கு பலத்த சத்தங்கள் எழத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT