ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஞ்சியுலார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஞ்சியுலார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாள எல்இடியுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த தொடர் துப்பாக்கிச்சூட்டில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பெமினா என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து போலீசார் காயமடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.