முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஞ்சியுலார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 15 ஜூன், 2022 at 12:00 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:02 PM

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஞ்சியுலார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாள எல்இடியுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த தொடர் துப்பாக்கிச்சூட்டில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

Advertisement

மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பெமினா என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து போலீசார் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.