முகப்பு
இந்தியா

லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட புணேவைச் சேர்ந்தவர் கைது 

லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட புணேவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 24 மே, 2022 at 1:39 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:50 PM


லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட புணேவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இவர் புணேவில் வசிக்கும் ஜுனைடு என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

Advertisement

சந்தேக நபர் சமூக ஊடகங்கள் மூலம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்பில் உள்ளார். 

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு தொடர்பாக ஜுனைடு என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.