Maha: Five dead, seven injured as vehicle falls into gorge 
இந்தியா

உதம்பூரில் 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். 

DIN

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். 

உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியில் உள்ள பிரேம் மந்திர் அருகே காலை 8.30 மணியளவில் ராம்பான் மாவட்டத்தில் உள்ள கூல்-சங்கல்தான் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் ஜம்முவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது 
இந்த விபத்து நடைபெற்றது. 

கார் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் (தொழுகை தலைவர்) முப்தி அப்துல் ஹமீத் (32) மற்றும் அவரது தந்தை முப்தி ஜமால் தின் (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அவரது தாயார் ஹஜ்ரா பேகம் (60), மருமகன் அடில் குல்சார் (16) ஆகியோர் மீட்கப்பட்டனர். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், இறந்த நான்கு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து! சம்பவ இடத்தின் காட்சிகள்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

SCROLL FOR NEXT