முகப்பு
இந்தியா

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை

நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் தேசவிரோதிகளால் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை தகர்க்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.