FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தீபாவளியால் காற்று மாசு: சுவாசப் பிரச்னை நோயாளிகளில் 15% அதிகரிப்பு

தடையை மீறி தீபாவளியன்று தில்லி-என்சிஆர் உட்பட நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்தனர்.

Updated On : 27 அக்டோபர் 2022, 10:49 pm IST
பகிர்:

நொய்டா: தடையை மீறி தீபாவளியன்று தில்லி-என்சிஆர் உட்பட நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்தால், தொடர்ந்து காற்றின் தரத்தில் மாசு அதிகரித்தது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 300-ஐ எட்டியுள்ள நிலையில், மாசுபட்ட காற்றில் பட்டாசுகளில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புகையாலும் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி நோயாளிகளின் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதே வேளையில், இதய நோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரித்து வருகிறது.

காற்று மாசு குறித்து மருத்துவர் அமித் குமார் தெரிவிக்கையில், மாசுபட்ட காற்றால் இதயம் மற்றும் நுரையீரலையும் பாதிக்கிறது. சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக புகார் கூறி, பல நோயாளிகள் மருத்துவமனைகளை அடைகின்றனர். கடந்த ஆண்டை விட மாசு அளவு குறைவாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக மாசின் அளவு அதிகரித்துள்ளது. இதனுடன் கண் எரிச்சல் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

காற்று மாசுபாட்டின் தாக்கம் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலில் அதிக அளவு மாசுக்கள் கலப்பதால் நரம்புகளின் வீக்கம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக இதயத்திற்கு ரத்தம் வழங்கும் தமனிகள் கடினமாகி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது. இதை தடுக்க, கட்டாயம் முகமூடி அணிய வேண்டும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கண் எரிச்சல் நோயாளிகள், தங்கள் கண்களை அடிக்கடி சுத்தமான நீரில் கழுவ வேண்டும் என்றும் ஆஸ்துமா நோயாளிகள் எல்லா நேரங்களிலும் இன்ஹேலரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments