முகப்பு
இந்தியா

அனைவருக்கும் உதவி: ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

இலங்கையில் வாழும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2022 at 5:33 PM
அனைவருக்கும் உதவி: ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்
பகிர்:

இலங்கையில் வாழும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருக்கும் வேண்டுகோளில், நாடு ஒன்றுபட்டிருக்கும் வேளையில், தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது, நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில், அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இந்த வேளையில் தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.