தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி
தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
ஆங்கிலேய ஆட்சியாளா்களால் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது மக்களின் போராட்டம் மற்றும் உயிா்த்தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தாா்.
இந்நிலையில், தேசப் பிரிவினை துயரங்கள் நாளையொட்டி பிரதமர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், “தேசப் பிரிவினையின்போது உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். நமது வரலாற்றின் துயா்நிறைந்த இந்த காலகட்டத்தை கடந்து வந்தவா்களின் மனவலிமையும் உறுதியும் பாராட்டுதலுக்குரியது”என்று மோடி குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.