பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் வரலாறு படைத்தது: சோனோவால்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சர்பானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சர்பானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்தபோது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக மாறும் என்பது உறுதி.
Advertisement
Advertisement
கடந்த 60 ஆண்டுகளாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் கையாண்டது. இவ்வளவு காலம் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
பிரதமர் மோடி தலைமையில் 2024-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். இந்திய மக்கள் இனி பிரதமர் மோடியை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று சோனோவால் நம்பிக்கை தெரிவித்தார்.
காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலகத்தில், குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர பட்டேல் இன்று பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.