உலகளவில் கரோனா அதிகரிக்கிறது; இந்தியாவில் குறைகிறது: சுகாதாரத் துறை
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கரோனா அதிகரித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் குறைந்து வருவதால மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், கடந்த சில நாள்களாக உலக அளவில் திரிபு வகை கரோனா அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் குறைந்து வருகிறது. சீனாவில் கரோனா திரிபு வகை அதிகரித்து வருவதையும், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையும் பார்க்கமுடிகிறது. ஆனால், இந்தியாவில் ஆரம்பக்கட்டத்திலுள்ளதால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.