'நான் ஒரு தமிழன்': ராகுல் காந்தி
மக்களவை உரையில் தமிழ்நாட்டை அதிக முறை குறிப்பிட்டது குறித்து கேட்டதற்கு தான் ஒரு தமிழன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
மக்களவை உரையில் தமிழ்நாட்டை அதிக முறை குறிப்பிட்டது குறித்து கேட்டதற்கு தான் ஒரு தமிழன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களையில் இன்று (புதன்கிழமை) பேசினார். அவரது உரையில், தமிழ்நாட்டை அதிகமுறை உச்சரித்தது குறித்து அவரிடம் பின்னர் கேள்வியெழுப்பப்பட்டது.
இதையும் படிக்க | 2016-2020 இல் 20,17,427 கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது: மத்திய அரசு
Advertisement
Advertisement
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, தான் ஒரு தமிழன் என்றார். மேலும் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் குறித்து உரையில் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.
இதையும் படிக்க | 'உங்களால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது': பாஜகவை விளாசிய ராகுல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.