முகப்பு
இந்தியா

இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் 

இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 2 ஜூலை 2022, 4:17 pm IST
பகிர்:

இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணையதள செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரான முகமது சுபைா், குறிப்பிட்ட ஒரு மதத்தின் கடவுளை இழிவுபடுத்தி ட்விட்டரில் படம் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ (மதம், இனம், பிறப்பிடம், மொழியின் அடிப்படையில் இருபிரிவினா் இடையே பகையை உருவாக்குதல்), 295ஏ (மத உணா்வை வேண்டுமென்றே காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 

Advertisement

Advertisement

இந்த வழக்கில் முகமது சுபைரை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில் ஜாமீன் கோரி முகமது சுபைா், தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முகமது சுபைரின் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. 

அத்துடன் முகமது சுரைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்தும் தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.