முகப்பு
இந்தியா

என்கவுன்டர்: பெற்றோர் கேட்டுக்கொண்டதால் சரணடைந்த பயங்கரவாதிகள்

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் என்கவுன்டரின்போது பெற்றோர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். 

Updated On : 6 ஜூலை 2022, 3:46 pm IST
பேச்சுவார்த்தையில் பெற்றோர்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் என்கவுன்டரின்போது பெற்றோர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) அதிகாலை காவல் துறையினர் என்கவுன்டரில் ஈடுபட்டனர். குல்காம் மாவட்டத்தின் ஹதிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து இன்று அதிகாலை களமிறங்கிய காவல் துறையினர், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பயங்கரவாதிகளும் காவல் துறையினரை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதனிடையே பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மூலம் காவல் துறையினர் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

காவல் துறையின் ஒலிப்பெருக்கி மூலம் பேசிய பெற்றோர்கள் தங்கள் மகன்களை சரணடையுமாறு வேண்டி கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments