இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமானம் பாட்னாவில் தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது,
புதுதில்லி: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை தில்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ‘எல்லையில் புதிய சீன கட்டுமானம்: இந்தியா உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’
Advertisement
Advertisement
ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அவரது பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பயணி கைது செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.