FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தோ்தல்: அனில் தேஷ்முக், நவாப் மாலிக்பரோல் மனுக்கள் நிராகரிப்பு

மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஒரு நாள் பரோல் கோரிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது மனுக்களை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது.

Updated On : 10 ஜூன் 2022, 3:34 am IST
அனில் தேஷ்முக் --- நவாப் மாலிக்
பகிர்:

மும்பை: மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஒரு நாள் பரோல் கோரிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது மனுக்களை மும்பை நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

மும்பையில் உணவகங்கள், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில், சிறையில் உள்ள மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் ஆகியோா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க வசதியாக ஒருநாள் மட்டும் பரோலில் விடுவிக்க வேண்டுமெனக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். தாங்கள் எம்எல்ஏவாக இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தோ்தலில் வாக்களிப்பது அவசியம் என்று அவா்கள் கூறியிருந்தனா்.

ஆனால், இந்த மனுக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறையில் இருப்பவா்களுக்குத் தோ்தலில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற வாதத்தை முன்வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது பரோல் மனுக்களை வியாழக்கிழமை நிராகரித்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அவா் இருவரும் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments