FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அக்னிபத்துக்கு எதிராக இப்படிப் போராடுங்கள்: வருண் காந்தி யோசனை

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக மாணவர்கள் தொடங்கியிருக்கும் போராட்டத்துக்கு தனது ஆதரவை அளித்திருக்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி.

1 பிப்ரவரி 2024, 3:03 pm IST
வருண்காந்தி (கோப்புப்படம்)
பகிர்:


புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக மாணவர்கள் தொடங்கியிருக்கும் போராட்டத்துக்கு தனது ஆதரவை அளித்திருக்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி.

அதேவேளையில், அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அறவழியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும், நாட்டின் ராணுவ வீரராகத் தேர்வாக நினைக்கும் இளைஞர்கள், இவ்வாறு பொதுச் சொத்துகளை நாசம் செய்யக் கூடாது, தேச நலமே முக்கியம் என்றும் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

நீங்கள் உங்கள் உரிமையைக் காக்க போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், அதனை அமைதியான முறையில் அறவழியில் நடத்த வேண்டும் என்று விடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

தொடரும் போராட்டம்..

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments