தில்லி மாநகராட்சி திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தில்லி மாநகராட்சி திருத்த மசோதா 2022-க்கு மத்திய அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தில்லி மாநகராட்சி திருத்த மசோதா 2022-க்கு மத்திய அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தில்லி மாநகராட்சியை ஒன்றிணைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அடுத்த வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.