முகப்பு
இந்தியா

மும்பையில் புறநகர் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கம்

மும்பை பகுதியில் புறநகர் விரைவு ரயில்கள் 15-20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Updated On : 4 நவம்பர் 2022, 4:10 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

மும்பை பகுதியில் புறநகர் விரைவு ரயில்கள் 15-20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் மும்பைப் பிரிவு ரயில்வே மேலாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து புறநகர் விரைவு ரயில்களும் 15-20 நிமிடங்கள் தாமதமாக இயங்குகின்றன. 

எனவே, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மும்பையில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 ரயில்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஆறு நீண்ட தூர ரயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக மும்பை வந்தடைந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments