முகப்பு
இந்தியா

புணே சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: 2 பேர் காயம்! 

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஏர்வாடா மத்தியச் சிறையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறை ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். 

Updated On : 9 நவம்பர் 2022, 3:02 pm IST
பகிர்:

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஏர்வாடா மத்தியச் சிறையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறை ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். 

இச்சம்பம் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. சிறைக்குள் இருந்த மற்றொரு குழு மீது கைதிகளின் குழு கற்கள் மற்றும் ஓடுகள் வீசியதாக ஏர்வாடா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறை ஊழியர்கள் தலையிட முயன்றபோது, சிறை கைதிகளில் சிலர் கற்களை வீசி 2 சிறை ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கினர்.

Advertisement

Advertisement

காயமடைந்த சிறை ஊழியர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

புகாரின் அடிப்படையில், ஐந்து கைதிகள் பின்னர் கைது செய்யப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments