முகப்பு
இந்தியா

பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

Updated On : 20 நவம்பர் 2022, 11:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டில் ஓசன்சாட்-3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைக் கோள் ஏவுதல் நவம்பர் 26 (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பேசியதாவது: இந்த பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தில் ஓசன்சாட்-3 புவி கண்காணிப்பு  செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. மேலும், அமெரிக்காவினுடைய சிறிய வகை நானோ செயற்கைக் கோள்களும் ஏவப்பட உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments