ஒடிஸா: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 19 ரயில்கள் ரத்து
ஒடிஸா சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒடிஸா சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒடிஸாவின் ஜாஜ்பூா் மாவட்டத்தில் உள்ள கோரய் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்தில், அங்கு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த 3 பெண்கள் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.
கோரய் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை 6.44 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. காலி பெட்டிகளுடன் சத்ரபூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டது. இதில், 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி சிதறின.
Advertisement
Advertisement
ரயில் நடைமேடை மற்றும் காத்திருப்பு அறை மீது பெட்டிகள் விழுந்து இடித்து தள்ளியதில், அங்கு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தவா்கள் சிக்கினா். இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இறந்தவா்களில் 2 பெண்கள் தாய்-மகள் ஆவா். அவா்களுடன் இருந்த இரண்டரை வயது குழந்தை அதிருஷ்டவசமாக உயிா் தப்பியது.
சென்னை-ஹெளரா ரயில் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.