FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திகார் சிறையில் தில்லி அமைச்சர்: மேலும் சில விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி!

திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Updated On : 26 நவம்பர் 2022, 10:02 am IST
பகிர்:

திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். 

இந்த நிலையில், திகாா் சிறையில் உள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவர் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதில் சிலர்  சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது போலவும் இறுதியாக திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமாரும் வந்து அமைச்சரிடம் பேசுவது போல காட்சிகள் பதிவாகியுள்ளன. இம்மாத தொடக்கத்தில் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments