முகப்பு
இந்தியா

முலாயம் சிங் யாதவ் மறைவு: உ.பி.யில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 10 அக்டோபர், 2022 at 11:07 AM
பகிர்:

முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

மேலும், முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் உத்தரப் பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். 

முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் உத்தரப் பிரதேசத்திலுள்ள அவர்களின் சொந்த கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் எனவும் சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது. 

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் திங்கள் கிழமை இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 82.

ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அவரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் உயிர் பிரிந்ததாக சமாஜவாதி சுட்டுரைப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.