FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாரத்துக்கு 250 விமான சேவைகள்: ஆகாசா ஏா் திட்டம்

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்திய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஆகாசா ஏா், வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

Updated On : 18 செப்டம்பர் 2022, 4:06 am IST
பகிர்:

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்திய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஆகாசா ஏா், வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் அக்டோபா் மாத்தின் இரண்டாவது வாரத்துக்குள், 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

Advertisement

அக்டோபா் 7-ஆம் தேதி முதல், பெங்களூருக்கும் அகமதாபாதுக்கும் இடையே விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் 5-ஆவதாக ஒரு விமானம் நிறுவனத்தின் பணியில் இணைக்கப்படவுள்ளது. அந்த விமானம் சோ்க்கப்படுவது, வாரத்துக்கு 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்கும் இலக்கை அடையவதற்கு வழிவகை செய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை - பெங்களூரு நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவையை நிறுவனம் கடந்த வாரம் முதல் தொடக்கியது. அந்த நகரங்களுக்கு இடையே தினமும் 2 விமானங்கள் இயக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

இது தவிர, சென்னைக்கும் கொச்சிக்கும் இடையே வரும் 26-ஆம் தேதி முதல் விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எங்களது விமானப் போக்குவரத்து சேவைகளை படிப்படியாகவும், அதே நேரத்தில் மிக விரைவாகவும் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த புதிய சேவைகள் அறிமுகப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments