மிட்டாய் மழை... துல்கரின் ஏஓடி திரைப்பட முதல் பாடல்!
ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது..
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக வெளியான காந்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தற்போது, தெலுங்கில் ஸ்ரீஸ்ரீ மற்றும் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) ஆகிய படங்களில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இரண்டு படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தின் முதல் பாடலான மிட்டாய் மழை பாடல் வெளியாகியுள்ளது. பாலாஜி வேணுகோபால் எழுதிய இப்பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார்.
The first song from the film Aakasamlo Oka Tara, starring actor Dulquer Salmaan, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.