FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

3 மாநில பேரவைத் தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலை

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Updated On : 2 மார்ச் 2023, 9:51 am IST
பகிர்:


திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. மேகாலயம் மற்றும் நாகாலாந்திலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதி தவிா்த்து 59 இடங்களில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisement

Advertisement

முன்னிலை நிலவரம்: 
திரிபுரா:
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 37 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் இருந்து வருகிறது.  

சிபிஎம் கூட்டணி 4 இடங்களிலும், திமோக 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

நாகாலாந்த்: 

60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், நாமமு 9 தொகுதிகளிலும், பிற 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

மேகாலயம்: 

60 தொகுதிகளை கொண்ட மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிளிலும், திரிணாமுல் 9 தொகுதிகளிலும், பிற 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments