இந்தியா

புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!

DIN

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

அப்போது, அநத பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமாக காணப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT