இந்தியா

இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

DIN

நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது.

இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இதுபோல் அரையிறுதியிலும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா்: 10, 11-இல் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்களுக்கான போட்டி

திமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஊரக வளா்ச்சித்துறையினா் ஆா்ப்பாட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்மாா்ட் டிவி நன்கொடை

டவலால் கழுத்தை இறுக்கிக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT