ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு!
ரஷ்யாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம்.
சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம், இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யாவில் உயர்கல்வி படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் முழு நிதியுதவியுடன் கூடிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நிதியுதவியை பொருத்தளவில், 89 இடங்களில் உள்ள 766 ரஷ்ய பல்கலைக்கழகங்களில் பொது மருத்துவம், இயற்பியல், அணுசக்தி மற்றும் ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் சேரும் மாணவர்கள் பல்வேறு வகையிலான உதவிகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.
Advertisement
Advertisement
சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.education-in-russia.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
உதவித்தொகையுடன் ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான தகவல்களை சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து அந்த நாடுகளில் படித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து இந்த நாடுகளில் உயர்கல்வி படிக்கச் செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.