FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை ஹரியாணா முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: பஞ்சாப் அமைச்சர் சீமா

பஞ்சாப் முதல்வர் மனோகர் லால் கட்டார் பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் அமைச்சர் சீமா கூறியுள்ளார்.

6 பிப்ரவரி 2024, 6:49 pm IST
பகிர்:

பயிர்க்கழிவுகள் எரிப்பு தொடர்பாக அரசியல் செய்வதை ஹரியாணா முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: பஞ்சாப் அமைச்சர்

பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் ஹரியானா முதல்வரைத் தாக்கிப் பேசிய பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா,  ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு விவசாயிகளுடன் நிற்க வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசு பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளபடி பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்தநிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் அமைச்சர் பேசினார். 

Advertisement

Advertisement

செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய பஞ்சாப் அமைச்சர் சீமா, "அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக, ஹரியாணாவில்தான் இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே ஹரியாணா முதல்வர் கட்டார் இதில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு விவசாயிகளுடன் நிற்க வேண்டும்." என்று கூறினார்.

இதுகுறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: “பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பயிர்க்கழிவுகள் எரிப்பதை நிறுத்திய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த விவகாரம் அரசியலுக்கானது அல்ல. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலும் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைப் பலன்களை இழக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments