FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா, ராகுல், கார்கே பங்கேற்பு!

மும்பையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

Updated On : 28 ஆகஸ்ட் 2023, 7:19 pm IST
பகிர்:


மும்பையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தியுள்ளன. முதல் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பங்கேற்பதை அக்கட்சி உறுதி செய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments