FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மிசோரம்: பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்.

Updated On : 4 டிசம்பர் 2023, 2:53 pm IST
பகிர்:

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இவற்றில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நேற்று (டிச.3) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிசோரம் மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.4) காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் ஆட்சியமைப்பதற்கு 21 இடங்கள் தேவை என்னும் நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சோரம் மக்கள் இயக்கம் 24 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

மிசோ தேசிய முன்னணி 7 தொகுதிகளில் வெற்றியடைந்து, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments