15 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது வழக்கு!
பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூர் மாவட்டத்தில், 15 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடகள வீரராக பயிற்சி பெற்று வரும் 15 வயது சிறுமி, கடந்த நவ.30 அன்று மாலையில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 இளைஞர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அந்த நால்வரும் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருளினைக் கொடுத்து பின் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் மிக்ஜம் புயல் பாபட்லாவில் கரையைக் கடக்கும்!
Advertisement
Advertisement
குற்றவாளிகளின் மேல் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.