முகப்பு
இந்தியா

உ.பி.யில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்க அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரப் பிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்களைத் திறக்க அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

Updated On : 19 டிசம்பர் 2023, 4:49 pm IST
யோகி ஆதித்யநாத்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்களைத் திறக்க அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

காசியாபாத், ரேபரேலி, சீதாப்பூர், ஹர்தோய், கான்பூர், தேஹாத், எட்டாவா, பாக்பத், பாரபங்கி, மைன்புரி மற்றும் ராம்பூர் உள்ளிட்ட மாநிலத்தில் 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சைபர் கிரைம் காவல் நிலையங்களை அமைப்பதற்கு ரூ.127.24 கோடி செலவாகும் என்று அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

இந்த காவல் நிலையங்கள் விரைவில் நிறுவப்பட்டு சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறிய அமைச்சர், மாநிலத்தில் இதுவரை 18 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

சைபர் கிரைம் காவல் நிலையங்கள் இனி காவல்துறை கண்காணிப்பாளர்களின் கீழ் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments