முகப்பு
இந்தியா

காங்கிரஸுக்கு வயது 139..!

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 டிசம்பர் 2023, 5:32 pm IST
காங்கிரஸ் கொடி
பகிர்:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 139-வது நாளைக் கொண்டாடும் வகையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அம்மாநில முன்னாள் முதல்வர் தகம் பரியோ, ராஜிவ் காந்தி பவனில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றியுள்ளார்.

காங்கிரஸின் எப்போதைக்குமான நோக்கம், மக்கள் நலனாகத்தான் இருந்துள்ளது என அவர் பேசியுள்ளார்.

Advertisement

தகம், ”காங்கிரஸ் அதன் புகழ்மிக்க வரலாறு மற்றும் மரபு குறித்து பெருமை கொண்டிருக்கிறது.

“காங்கிரஸ், இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பன்மொழி மற்றும் பன்மத சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் தலைமை தாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ்- அரசியல் கட்சி மட்டுமில்லை. அனைத்து இந்தியர்களின் வாழ்வின் அங்கம் என அவர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.