காங்கிரஸுக்கு வயது 139..!
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 139-வது நாளைக் கொண்டாடும் வகையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அம்மாநில முன்னாள் முதல்வர் தகம் பரியோ, ராஜிவ் காந்தி பவனில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றியுள்ளார்.
காங்கிரஸின் எப்போதைக்குமான நோக்கம், மக்கள் நலனாகத்தான் இருந்துள்ளது என அவர் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
தகம், ”காங்கிரஸ் அதன் புகழ்மிக்க வரலாறு மற்றும் மரபு குறித்து பெருமை கொண்டிருக்கிறது.
“காங்கிரஸ், இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பன்மொழி மற்றும் பன்மத சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுகிறது.
இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் தலைமை தாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு!
மேலும், காங்கிரஸ்- அரசியல் கட்சி மட்டுமில்லை. அனைத்து இந்தியர்களின் வாழ்வின் அங்கம் என அவர் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.