முகப்பு
இந்தியா

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்! 

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 12 பிப்ரவரி 2023, 12:11 pm IST
கோப்புப்படம்
பகிர்:

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஜராத், கெளவுகாத்தி, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கிரிதர் கோகனி, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஐஸ்வந்த் சிங், அசாம் மாநிலம் கெளவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்தீப் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோட்டீஸ்வர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்டத் துறை கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.